ஆசியக்கோப்பை தொடர்
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இந்த தொடரில் மொத்தமாக 6 அணிகள் மோதவுள்ளன. ஒரு குரூப்பிற்கு 3 அணிகள் என்ற கணக்கில் மொத்தம் 2 குரூப்களாக இந்த போட்டி நடத்தப்படவுள்ளது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் ஏ பிரிவில் இடம்பெற்றிருக்கிறது.
தீவிரம் காட்டும் இந்தியா
கடந்தாண்டு டி20 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியிருந்தது. இதனையடுத்து இந்த ஆசியக்கோப்பையில் பாகிஸ்தான் அணியை வீழ்த்த வேண்டும் என்றும், கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முணைப்புடனும் களமிறங்குகிறது.
ரோகித்தின் பெருமை
இந்நிலையில் இந்த தொடருக்காக ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த பிசிசிஐ புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் ரோகித் சர்மா " ஆசியக்கோப்பையை 7 முறை வென்றிருக்கிறோம். நம். 1 அணியாக இந்திய வலம் வருகிறோம். பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறோம். ஆனால் இதையெல்லாம் விட பெரிய விஷயம் தான் 140 கோடி மக்கள் இந்தியா இந்தியா என எங்களுக்காக குரல் கொடுப்பது.
|
சாதித்துக் காட்டுவோம்
எனவே இந்த பெருமைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டும். அதற்காக முதலில் ஆசியக்கோப்பையை கைப்பற்றி சாதிக்க வேண்டும். வென்றுக்காட்டுவோம் என ரோகித் சர்மா பெருமையுடன் கூறியுள்ளார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.