
ரோகித்தின் அதிரடி
இந்திய அணியின் இந்த வெற்றிக்கு ரோகித் சர்மா கொடுத்த சிறப்பான தொடக்கம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதும், தூண் போன்று நிலையாக நிலைத்து நின்றார். 44 பந்துகளை சந்தித்த அவர் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 64 ரன்களை விளாசியிருந்தார்.

உலக சாதனை படைப்பு
இந்நிலையில் இந்த அரைசதம் மூலம் 2 பிரமாண்ட சாதனைகளை ரோகித் சொந்தமாக்கியுள்ளார். அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். இதுவரை அவர் 121 இன்னிங்ஸ்களில் 3,443 ரன்களை குவித்துள்ளார். இவருக்கு அடுத்தபடியாக நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் 3,399 ரன்களும், 3வது இடத்தில் விராட் கோலி 3,308 ரன்களும் எடுத்து உள்ளனர்.

கோலியின் ரெக்கார்ட் முறியடிப்பு
இதுமட்டுமல்லாமல் விராட் கோலியின் உலக சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக அரைசதங்களை அடித்த வீரர் என்ற பெருமையை கோலி வைத்திருந்தார். அவர் 30 அரைசதங்களை அடித்துள்ளார். ஆனால் நேற்றைய போட்டியில் ரோகித் சர்மா தனது 31வது அரைசதத்தை பூர்த்தி செய்து நம்பர் 1 வீரராக உருவெடுத்தார்.

பாபர் அசாமின் எழுச்சி
இந்த வரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலிக்கு அடுத்தபடியாக பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் மிக வேகமாக முன்னேற்றம் கண்டு வருகிறார். அதிக அரைசதம் அடித்த வீரர்கள் பட்டியலை பார்க்கலாம்.
ரோகித் சர்மா - 31
விராட் கோலி - 30
பாபர் அசாம் - 27
டேவிட் வார்னர் - 23
மார்டின் கப்தில் - 22


Click it and Unblock the Notifications











