
ஓப்பனிங் ஜோடி
ஓவல் பிட்ச்-ல் மிகவும் ஸ்விங் இருந்ததால் களமிறங்கிய இந்திய அணியும் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறுமோ என்ற பதற்றம் நிலவியது. ஆனால் அதனை பொய்யாக்கினர் ரோகித் - தவான் ஜோடி. நீண்ட நாட்களுக்கு பின் சேர்ந்த அவர்கள் சீரான வேகத்தில் ரன் குவித்தனர். இதனால் 10 ஓவர்களுக்குள் 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை கடந்தனர்.

புது சாதனை படைப்பு
இந்நிலையில் இந்த ரன்கள் மூலம் புதிய சாதனையை அவர்கள் படைத்துள்ளனர். சர்வதேச ஒருநாள் போட்டியில் அதிக பார்ட்னர்ஷிப் அமைத்த பட்டியலில் 4வது ஜோடியாக இணைந்துள்ளனர். இவர்கள் 5000 ரன்களை கடந்து பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தியுள்ளனர்.

சாதனையாளர்கள்
இந்த பட்டியலில் முதல் இடத்தில் சச்சின், கங்குலி ஜோடி 176 முறை இணைந்து 6,609 ரன்களை அடித்துள்ளனர். இதன்பின்னர் கில் கிறிஸ்ட் - ஹெய்டன் ஜோடி 5,372 ரன்களும், ஹெய்னஸ் - க்ரீனிட்ஜ் ஜோடி 5,150 ரன்களை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதில் தற்போது ரோகித் - தவான் ஜோடி இணைந்துள்ளனர்.

உலகக்கோப்பை கனவு
ஷிகர் தவான் - ரோகித் சர்மா ஜோடிக்கு வயதாகிவிட்டது. இதுவே இங்கிலாந்தில் அவர்கள் கடைசியாக இணைந்து விளையாடும் சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம் என கருதப்பட்டது. ஆனால் உலகக்கோப்பை வரை நாங்கள் இணைந்து விளையாடுவோம் என நிரூபித்துக்காட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











