Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

தென்னாப்பிரிக்க மண்ணில் இந்த வீரர் கண்டிப்பாக சேர்க்கப்பட வேண்டும்.. EX தமிழக வீரர் கருத்து

மும்பை: 2027 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான இந்திய அணியில், மூத்த பேட்ஸ்மேன் ரோஹித் சர்மா கட்டாயத் தேர்வாக மாற்றப்பட வேண்டும் என்று முன்னாள் இந்தியத் தொடக்க ஆட்டக்காரர் சதாகோபன் ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார். அடுத்த உலகக் கோப்பை போட்டி தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில், செனா (SENA - தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) நாடுகளில் ரோஹித்தின் சிறப்பான அண்மைக்கால புள்ளிவிவரங்களை அவர் இதற்கு ஆதாரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கம்பீர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி கடந்த ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் சமீபத்தில் இங்கிலாந்து ஆகிய இரண்டு செனா நாடுகளில் ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் இந்திய வீரர்கள் தரப்பில் ஒட்டுமொத்தமாக இரண்டு சதங்கள் மட்டுமே அடிக்கப்பட்டுள்ளன.

Rohit sharma

அந்த இரண்டு சதங்களையும் ரோஹித் சர்மாவே அடித்து அசத்தியுள்ளார். இந்த புள்ளிவிவரத்தை அடிப்படையாகக் கொண்டு, அடுத்த உலகக் கோப்பைக்கான அணியில் ரோஹித் சர்மாவின் தேர்வு குறித்து விவாதிக்கத் தேவையில்லை என்று சதாகோபன் ரமேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

IND vs SL டெஸ்ட் தொடர்: 3 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு தராத தேர்வுக்குழு

IND vs SL டெஸ்ட் தொடர்: 3 வீரர்கள் சிறப்பாக செயல்பட்டும் வாய்ப்பு தராத தேர்வுக்குழு

இதுகுறித்து ரமேஷ் தனது பதிவில், "அடுத்த உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடைபெற உள்ளது, இது செனா நாடுகளில் ஒன்றாகும். கௌதம் கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக இருக்கும் காலத்தில் இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 15 சதங்களை அடித்துள்ளனர். இருப்பினும், அதில் இரண்டு சதங்கள் மட்டுமே செனா நாடுகளில் அடிக்கப்பட்டவை. அந்த இரண்டு சதங்களையும் ரோஹித் சர்மாவே அடித்துள்ளார்.

எனவே, உலகக் கோப்பைக்கான அணியில் முதலில் எழுதப்பட வேண்டிய பெயர் ரோஹித் சர்மாவினுடையதாக இருக்க வேண்டும். இதில் எந்தவித தயக்கமும் இருக்கக் கூடாது" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சிட்னி மைதானத்தில் ரோஹித் சர்மா 125 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்தார். அதேபோல், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் தீர்மானிக்கும் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் 110 பந்துகளில் 138 ரன்கள் விலாசினார். இந்த இரண்டு சதங்களையே சதாகோபன் ரமேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

"2027 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மாவைத் தேர்ந்தெடுப்பதில் தேர்வாளர்கள் இன்னும் தயக்கம் காட்டுவது போல் தெரிகிறது. ஆனால், அவர் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அவர் வரலாற்றின் மிகச்சிறந்த வீரர் என்பதற்கோ அல்லது உணர்வுப்பூர்வமான காரணங்களுக்கோ இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. செனா நாடுகள் இந்திய வீரர்களுக்கு எப்போதும் மிகப்பெரிய சவாலாக இருக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம்" என்று ரமேஷ் மேலும் கூறியுள்ளார்.

வைபவ் சூர்யவன்ஷி டான் பிராட்மேன் போல் வருவார்.. ராபின் உத்தப்பா கருத்து

வைபவ் சூர்யவன்ஷி டான் பிராட்மேன் போல் வருவார்.. ராபின் உத்தப்பா கருத்து

ரோஹித் சர்மா செனா நாடுகளில் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் முறையே 56.66 மற்றும் 64.12 என்ற சிறந்த ஒருநாள் சராசரியைக் கொண்டுள்ளார். இருப்பினும், தென்னாப்பிரிக்க மண்ணில் அவர் தடுமாற்றத்தையே சந்தித்துள்ளார்.அங்கு விளையாடிய 13 இன்னிங்ஸ்களில் அவரது சராசரி 20-க்கும் குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, July 28, 2026, 16:26 [IST]
Other articles published on Jul 28, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+