ரோஹித்துக்கு ஏன் கேப்டன் பதவி?
கோலி சில தொடர்களில் ஓய்வு பெறும் போது ரோஹித் சர்மா இந்திய அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்கிறார். அந்த வகையில் ரோஹித் இதுவரை 12 டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார். அதில் 11 போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார் ரோஹித்.
டி20யில் அதிக வெற்றிகள்
முதல் 12 டி20 போட்டிகளில் கேப்டனாக இருந்து 11 வெற்றிகளை பெற்று அதிக வெற்றி பெற்றவர் என்ற சாதனையை செய்துள்ளார் ரோஹித். இதற்கு முன் சர்ப்ராஸ் அஹ்மது, ஷோயப் மாலிக் மற்றும் மைக்கேல் கிளார்க் உள்ளிட்டோர் தங்கள் முதல் 12 டி20 போட்டிகளில் கேப்டனாக 10 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
டி20 தொடர் வெற்றியில் சாதனை
இதில் இந்திய அணியின் கேப்டன்கள் தோனி மற்றும் கோலி ஆகியோரையும் முந்தியுள்ளார் ரோஹித். மேலும், இந்திய அளவில் முதல் முறையாக இரண்டு டி20 தொடர்களை முழுவதுமாக கைப்பற்றி அசத்தியுள்ளார் ரோஹித். இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களை 3-0 என முழுவதுமாக கைப்பற்றி உள்ளார் ரோஹித்.
ரோஹித் கோலியை விட நல்ல கேப்டன்
ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் விராட் கோலியை விட சிறப்பாக செயல்படுகிறார் என்ற பேச்சு கிரிக்கெட் அரங்கில் துவங்கி உள்ளது. ரோஹித் சர்மா களத்தில் அமைதியாக நடந்து கொள்வதும், வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்து ஆதரிப்பதும் பலரையும் கவர்ந்துள்ளது. மேலும், ரோஹித் அணியை வெற்றி பெற வைப்பதிலும் சாதித்து வருகிறார்.