தென் ஆப்பிரிக்காவிடம் 5 ரன் வித்தியாசத்தில் தோற்றது இந்தியா.. ரோஹித் அதிரடி வீண்
கான்பூர்: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் தோற்றுப் போனது.
ரோஹித் சர்மா போட்ட அதிரடி சதம் வீணாகிப் போனது.
ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இன்று முதல் போட்டி கான்பூரில் நடந்தது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ரன்களைக் குவித்தது.

ஏப் டிவில்லியர்ஸ் 104 ரன்களைக் குவித்தார். டூபிளஸிஸ் 62 ரன்கள் குவித்தார். இந்தியத் தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்களை வீழ்த்தினார். அமீத் மிஸ்ராவுக்கு 2 விக்கெட் கிடைத்தது.
பின்னர் விளையாடிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா உரமூட்டினார். அபாரமாக ஆடிய அவர் 150 ரன்களைக் குவித்தார். மறஉபக்கம் ரஹானே 60 ரன்களையும், கேப்டன் டோணி 31 ரன்களையும் விளாசினார். ஆனாலும் இந்தியாவால் வெற்றிக் கோட்டைத் தொட முடியாமல் போய் விட்டது.
7 விக்கெட் இழப்புக்கு 298 ரன்களை மட்டுமே இந்தியாவால் எடுக்க முடிந்தது.


Click it and Unblock the Notifications