Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பாரதரத்னா பெற 200% தகுதியானவர் சச்சின் டெண்டுல்கர்-டோணி

Mahendra Singh Dhoni
சென்னை: பாரத ரத்னா விருது பெறசச்சின் டெண்டுல்கர் 200 சதவீதம் தகுதியானவர் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோணி கூறியுள்ளார்.

உலகக் கோப்பைப் போட்டிகள் முடிவடைந்து விட்டதைத் தொடர்ந்து அடுத்து ஐபிஎல்-4 திருவிழா தொடங்குகிறது. வருகிற 8ம் தேதி சென்னையில் இப்போட்டித் தொடர் கோலாகலமாக தொடங்குகிறது.

8ம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. மொத்தம் 10 அணிகள் இம்முறை மோதவுள்ளன. இதில் புதிதாக சேர்ந்துள்ளவை புனே வாரியர்ஸ் மற்றும் கொச்சி டஸ்கர்ஸ் ஆகியவை.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்கேப்டனான டோணி இன்று சென்னை வந்தார். அவருடன் சுரேஷ் ரெய்னாவும் வந்தார். இருவருக்கும் விமான நிலையத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் டோணி செய்தியாளர்களிடம் பேசுகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பான பேட்டிங்குடன் உள்ளது. கோப்பையை வெல்ல முயற்சிப்போம்.

சென்னை அணியில் இந்த முறை முரளிதரன் இல்லை. பாலாஜியும் இல்லை. இருப்பினும் போதுமான பேட்ஸ்மென்களும், பவுலர்களும் உள்ளதால் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.

அனைத்துக் கோப்பைகளையும் வெல்ல வேண்டும் என்பதே எனது லட்சியம். தொடர்ந்து ஆடுவதால் வீரர்களின் ஆட்டத்திறன் பாதிக்கும் என்பது உண்மைதான்.

சச்சின் டெண்டுல்கர் என்னை சிறந்த கேப்டன் என்று புகழந்துள்ளார். இது மகிழ்ச்சி அளிக்கிறது. அங்கீகாரமாக கருதுகிறேன். சச்சின், பாரதரத்னா விருது பெற 200 சதவீதம் தகுதி உடையவர் ஆவார். அந்த விருது அவருக்குக் கிடைத்தால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்றார் டோணி.
Story first published: Wednesday, December 7, 2011, 18:45 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+