
383 ரன்கள் இலக்கு
முதல் இன்னிங்சை போன்று, 2வது இன்னிங்ஸிலும் அரைசதம் அடித்தார் ஸ்மித். 6 விக்கெட் இழப்பிற்கு 186 ரன்கள் அடித்த நிலையில், 2வது இன்னிங்சை ஆஸ்திரேலியா டிக்ளேர் செய்ய, 383 ரன்கள் என்ற கடின இலக்கு இங்கிலாந்துக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கம்மின்ஸ் அபாரம்
ஆனால், களத்தில் ஆஸி.யின் அபார பவுலிங் இங்கிலாந்தை திணறடித்தது. அந்த அணி, 197 ரன்களுக்கே 2வது இன்னிங்ஸில் ஆல் அவுட்டாகி 185 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கம்மின்சின் அபார பவுலிங்கில் இங்கிலாந்து 2வது இன்னிங்ஸில் அவரிடம் 4 விக்கெட்டுகளை இழந்தது.
எனது உள்ளுணர்வு
இங்கிலாந்து தொடக்க வீரர் பர்ன்ஸ், ஜோ ரூட் என 4 முத்தான விக்கெட்டுகளை சாய்தது அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்த போட்டிகுறித்து ஜாம்பவான் சச்சின் ஒரு டுவீட் பதிவு வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்பின்னர் நாதன் லயன் தான் முடிவை தீர்மானிக்கக் கூடிய முக்கியமான வீரராக இருப்பார், எனது உள்ளுணர்வு சொல்கிறது என்றார்.

எதுவும் இல்லை
ஆனால் முதல் இன்னிங்சில் விக்கெட்டே வீழ்த்தவில்லை லயன். 2வது இன்னிங்சிலாவது அசத்துவார் என்றால், அதுவும் இல்லை. இரண்டாவது இன்னிங்சில் கம்மின்ஸ் தான் விக்கெட்டுகளை வாரி அள்ளிக் கொண்டார்.

ரசிகர்கள் ஏமாற்றம்
லயன் எடுத்தது வெறும் 2 விக்கெட்டுகள். சச்சினின் கணிப்பு, பொய்யாகி போனதால் அவரது ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர். உலக கோப்பை தொடரில் அவர் 4 அணிகள் தான் செமி பைனலுக்குள் நுழைந்தது. ஆகையால் அவரது கணிப்பை பெரிதும் எதிர்பார்த்திருந்த ஆஸி. ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











