ஐபிஎல்
ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டுள்ளார். இவர் 20 லட்சம் ரூபாய்க்கு எடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎல் ஏலத்தில் முதலில் இவர் பெயர் இடம்பெறாமல் இருந்து பிறகு சேர்க்கப்பட்டது பெரிய அளவில் சர்ச்சையானது.
திடீர் ட்விஸ்ட்
அர்ஜுன் டெண்டுல்கர் ஏலத்தில் எப்போது விடப்படுவார் என பலரும் காத்திருந்த நிலையில் கடைசி நேரத்தில் தான் ஏலம் விடப்பட்டார். சச்சின் டெண்டுல்கர் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியே அர்ஜுன் டெண்டுல்கரையும் ஏலம் எடுத்தது.
நெப்போட்டிசம்
சர்ச்சைகளுக்கு இடையே அர்ஜுன் டெண்டுல்கர் எடுக்கப்பட்டது மிகப்பெரும் திறமையால் அல்ல ஜாம்பவானின் மகன் என்பதால் தான் என இணையத்தில் விமர்சனங்கள் எழுந்தன. மறுபுறம் சையது அலி முஷ்டக் தொடரில் அவரின் சிறப்பான ஆட்டத்தால் தான் ஏலம் எடுக்கப்பட்டார் என ஆதரவு கிளம்பியுள்ளது.
சச்சின் பதிலடி
சமீபத்தில் கோலி தனது மன அழுத்தம் குறித்து வெளிப்படையாக பேசியிருந்தார். அதற்கு பாராட்டு தெரிவித்துள்ள சச்சின், இந்த காலத்தில் இளைஞர்கள் சமூக வலைதளங்களில் ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார்கள். பலர் அவர்களை பற்றி பேசுகிறார்கள், ஆனால் அவர்களிடம் பேசுவதில்லை. நாம் தான் அவர்களை சரிபடுத்த உதவ வேண்டும்" என மகன் மீதான விமர்சனத்திற்கும் மறைமுக பதிலடி தெரிவித்துள்ளார்.