
100 சர்வதேச சதங்கள்
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கடந்த 2013ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், தற்போதுவரை ரசிகர்களால் கொண்டாடப்படுபவர். சர்வதேச அளவில் இந்தியாவிற்காக இவர் 100 சதங்களை அடித்தவர். இந்த சாதனை இதுவரை யாராலும் முறியடிக்கப்படவில்லை.

ரூ.50 லட்சம் நிதியுதவி
கொரோனா வைரஸ் காரணமாக இந்திய அரசு தடுமாறிக் கொண்டுள்ள நிலையில், இந்த நேரத்தில் அரசுக்கு கைகொடுக்கும்வகையில், பிரதமர் நிவாரண நிதி மற்றும் மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் நிதி ஆகியவற்றிற்கு தலா 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். இதேபோல மாதத்திற்கு 5,000 பேருக்கு உணவளிக்கவும் உறுதி அளித்துள்ளார்.

வீட்டிற்குள் முடங்கிய சச்சின்
சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்தை நெருங்கியுள்ளது. இந்தியாவிலும் நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து வீரர்களும் வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். சச்சின் டெண்டுல்கரும் வீட்டிற்குள் முடங்கியுள்ள நிலையில், சமூக வலைதளங்கள் மூலமாக அவர் ரசிகர்களை சந்தித்து வருகிறார்.

ஸ்கொயர் கட் முதல் ஹேர்கட் வரை
இதனிடையே சச்சின் டெண்டுல்கர், தனக்கு தானே புதிய ஹேர்கட்டை செய்துள்ளார். இந்த புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர், ஸ்கொயர் கட் முதல் ஹேர்கட்வரை வித்தியாசமான விஷயங்களை கொண்டாட்டத்துடன் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த பதிவிற்கு ஏராளமான ரசிகர்கள் தங்களது லைக்குகளையும் கமெண்ட்டுகளையும் அதிகளவில் அளித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











