மும்பை : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடனான நேற்றைய போட்டியில் சிஎஸ்கே 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
கடந்த 3 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்தித்த சிஎஸ்கே, இந்த வெற்றி மூலம் ஐபிஎல் பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்நிலையில் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர், சிஎஸ்கேவின் வெற்றிக்கு தனது டிவிட்டர் பக்கத்தின்மூலம் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதிய நேற்றைய ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தனர்.

இந்நிலையில் சிஎஸ்கேவின் இந்த அபார வெற்றிக்கு முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல். ராகுல், நிகோலஸ் ஆகியோர் சிறப்பாக விளையாடி சிறப்பான ஸ்கோரை பெற்ற போதிலும் சிஎஸ்கேவின் ஷேன் வாட்சன் மற்றும் டூ பிளசிஸ் அந்த இலக்கை எளிதாக அடைந்துள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். சிஎஸ்கேவிற்கு பாராட்டும் தெரிவித்துள்ளார்.