
கோலியின் பரிசு
இந்திய அணிக்காக கடைசியாக ஒரு முறை விளையாடி, பெரும் மன வேதனையுடன் நான் வீரர்கள் உடை மாற்றும் அறையில் அமர்ந்து இருந்தேன். அப்போது விராட் கோலி என்னிடம் வந்து, நான் ஓய்வு பெற்றதற்காக ஒரு நினைவு பரிசை வழங்கினார். அந்த பரிசை பார்த்ததும், எனக்கு வியப்பாக இருந்தது.

புனித கயிறு
ஆம், அது விராட் கோலிக்கு அவரது மறைந்த தந்தை வழங்கிய புனித கயிறு. அதனை விராட் கோலி தனது தந்தையின் நினைவாக வைத்திருந்தார். அதனை நினைவு பரிசாக எனக்கு வழங்கினார். விராட் கோலியின் இந்த செயலால் எனக்கு ஆனந்த கண்ணீர் வந்தது. எனினும் அவருக்காக அந்த நினைவு பரிசை நான் வாங்கி வைத்து கொண்டேன்.

திருப்பி கொடுத்தேன்
பின்னர் சிறிது நாட்கள் கழித்து விராட் கோலியிடம் அந்த நினைவு பரிசை திருப்பி கொடுத்தேன். இது விலை மதிப்புமிக்க பரிசு பொருள். உன் தந்தை உனக்கு வழங்கியது. இது வேறு யாரிடமும் இருக்க கூடாது. உன்னிடம் மட்டும் தான் இருக்க வேண்டும். இது உன்னுடைய சொத்து. உன் கடைசி மூச்சு இருக்கும் வரை இது உன்னிடம் தான் இருக்க வேண்டும் என்று கூறினேன்.
Recommended Video

பணம் முக்கியமல்ல
நான் கூறியதை விராட் கோலி புரிந்து கொண்டு அதனை வாங்கி கொண்டார். விராட் கோலியின் இந்த செயல் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. இதுவரை கிரிக்கெட் மூலம் எவ்வளவு பணம் சம்பாதித்தேன் என்று எனக்கு தெரியாது. ஏனென்றால், நான் நாட்டுக்காக விளையாடி ரன்களை அடிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தேன்.


Click it and Unblock the Notifications











