ஆடக் கூடாது
காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலில் நாற்பதுக்கும் மேற்பட்ட இந்திய வீரர்கள் பலியாகினர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தியா - பாகிஸ்தான் போட்டி நடைபெறக் கூடாது என பலரும் கூறி வருகின்றனர்.
வீழ்த்துவதற்கான நேரம்
இந்நிலையில் சச்சின், "இந்தியா எப்போதும் பாகிஸ்தானை உலகக்கோப்பையில் வென்றுள்ளது. மீண்டும் ஒரு முறை அவர்களை வீழ்த்துவதற்கான நேரம் இது. தனிப்பட்ட முறையில் அவர்களுக்கு அந்த தொடரில் இரண்டு புள்ளிகளை விட்டுக் கொடுப்பதில் எனக்கு விருப்பமில்லை" என்றார்.
கவாஸ்கர் சொன்ன கருத்து
அதே சமயம், சச்சின் இந்தியா என்ன முடிவெடுத்தாலும் தான் அதை ஆதரிப்பேன். நாடு தான் முதலில் என கூறினார். இதே கருத்தையே முன்னர் கவாஸ்கரும் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
முடிவு என்ன?
உலககோப்பையில் இந்தியா பாகிஸ்தான் அணிக்கு எதிராக ஆடாமல் இருந்தால் அந்த அணிக்கு சாதகமாகவே அது முடியும் என்பதை பலரும் வலியுறுத்தி வருகின்றனர். பிசிசிஐ இந்த விஷயத்தில் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.