சாம் கரணின் ஏலம்
சாம் கரண் முதன் முதலில் ரூ. 2 கோடி என்ற அடிப்படை தொகையில் ஏலத்திற்கு விடப்பட்டார். இதற்கு தானே ஆசைப்பட்டோம் என்பது போல அனைத்து அணிகளும் ஒரே நேரத்தில் கைகளை உயர்த்த ஏலம் விடுபவரே திகைத்துப்போனார். மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் சற்றும் யோசிக்காமல் அடுத்தடுத்து கேட்டுக்கொண்டே இருந்ததால் வெகு சீக்கிரமாகவே ரூ. 10 கோடியை தாண்டியது.
சிஎஸ்கேவின் எண்ட்ரி
அதுவரை அமைதி காத்து வந்த சிஎஸ்கே, கெத்தாக களம் புகுந்தது. இதனால் பெங்களூரு, மும்பை அணிகள் போட்டியில் இருந்து விலக, சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் விடாப்பிடியாக போராடின. சென்னை அணியும் எப்படியாவது கடைக்குட்டியை அழைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக ரூ. 15.25 கோடி வரை மல்லுக்கட்டி பார்த்தது. ஆனால் கையில் இருக்கும் தொகையே ரூ. 20.45 கோடி தான் என்பதால் வேறு வழியின்றி விலகியது.
நிற்காத போராட்டம்
சரி இப்போதாவது சாம் கரணின் வேட்டை நிற்குமா என்று பார்த்தால் லக்னோ அணி கடைசி நேரத்தில் புகுந்து பஞ்சாப்பிற்கு அதிர்ச்சி கொடுத்தது. எனினும் விடாப்பிடியாக போராடிய பஞ்சாப் இறுதியில் போராடி சாம் கரணை ரூ. 18.50 கோடி என்ற விலைக்கு ஏலம் எடுத்தது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு வாங்கப்பட்ட வீரர் என்ற பெருமையை சாம் கரண் பெற்றார். இதற்கு முன்பு கிறிஸ் மோரிஸை ரூ. 16.50 கோடிக்கு வாங்கியதே ரெக்கார்டாக இருந்தது.
அப்படி என்ன ஸ்பெஷல்
சென்னை அணிக்காக ஐபிஎல்-ல் விளையாடி வந்த சாம் கரண், சமீபத்தில் நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் அசுரத்தனமான ஃபார்மில் இருந்தார். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே டி20 தயாரிப்பு போன்று ஆச்சரியம் தந்து வருகிறார். அவர் இருந்தால் ஃபினிஷிங் மற்றும் டெத் ஓவர் பவுலிங்கிற்கு பிரச்சினையே இருக்காது. இதனால் தான் இவ்வளவு போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.