
வெற்றி மிதப்பு
இது குறித்து பேசிய அவர் இந்தியா டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தார்கள். ஆடுகளும் எப்படி இருக்கிறது என்பதை கணிக்காமலேயே தொடக்கத்தில் இருந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முயற்சி செய்தார்கள். இது கொஞ்சம் சறுக்களை ஏற்படுத்தியது. ஆதிக்கம் செலுத்த வேண்டும் என எண்ணற்ற அதிரடி ஷாட்டுகளை விளையாடினார்கள்.

போட்டி மாறியது
ஆடுகளம் இப்படித்தான் இருக்கும் என்று நமக்கு ஏற்கனவே தெரியும் என்ற தைரியத்தில் விளையாடியது தோல்விக்கு காரணம் என நான் கருதுகிறேன். எனினும் முதல் இன்னிங்ஸில் ஆட்டத்தின் போக்கை இந்தியா மாற்றியது. ஜடேஜா தான் அதிகமாக முயற்சி செய்து விக்கெட்டுகளை எடுக்க வேண்டும் என அனைவரும் நினைத்தோம். திடீரென்று அஸ்வினும் உமேஷ் யாதவும் போட்டியை தலைக்கீழ் மாற்றினார்கள்.

பாராட்டு
இவ்விருவரையும் பந்து வீச்சுக்கு அழைத்த ரோகித் சர்மாவின் முடிவு பாராட்டத்தக்கது. அஸ்வின் களத்தில் நின்ற சிறந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைத்தது இந்தியாவுக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது. மேலும் உமேஷ் யாதவ் கேமரான் கிரீன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆட்டம் இந்தியா பக்கம் சாய்ந்தது. எனினும் இதனை பயன்படுத்திக் கொள்ளாமல் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி மீண்டும் மோசமாக விளையாடி தோல்வியை தழுவி விட்டார்கள் என சஞ்சய் மஞ்ச தேக்கர் கூறியுள்ளார்.

கடைசி டெஸ்ட்
அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆவது இந்திய அணி வீரர்கள் ஆடுகளத்தை கனித்து சரியான முறையில் ரன்களை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். இந்த நிலையில் நான்காவது டெஸ்ட் போட்டிக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான முறையில் ஆடுகளம் அமைக்கப்பட மாட்டாது என்று தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











