மழை குறுக்கீடு
போட்டியில், நியூசிலாந்து 46.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. களத்தில் 50வது அரை சதத்தை நிறைவு செய்த ராஸ் டெய்லர் 67 ரன்களுடனும், விக்கெட் கீப்பர் லாதம் 3 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.
டுவிட்டர் பதிவு
இந் நிலையில் நேற்றைய போட்டியின் போது இந்திய அணியின் திறமையை விமர்சித்திருக்கிறார் வர்ணனையாளரும், முன்னாள் வீரருமான சஞ்சய் மஞ்ச ரேக்கர். டுவிட்டரில் அவர் இத்தகைய பதிவை வெளியிட்டுள்ளார். அவர் அதில் கூறியிருப்பதாவது:
|
ரிஸ்க் தேவையில்லை
போட்டியில் 5 பந்துவீச்சாளர்கள் சேர்க்கப்பட்டனர். இவ்வளவு பவுலர்களுடன் ரிஸ்க் எடுக்க தேவையில்லை. அதிலும் அவர்களில் 2 பந்துவீச்சாளர்கள் இந்த இந்திய அணிக்கு தேவையில்லாதவர்கள். அவர்கள் அணிக்கு செட் ஆகாத பந்துவீச்சாளர்கள் என்றார்.
இருவர் யார்?
ஆனால் அவர் குறிப்பிட்டிருக்கும் அந்த இருவர், யார் என்று தெரிய வில்லை. கண்டிப்பாக ஒன்று ஜடேஜாவாக இருக்கும் மற்றொன்று ஹர்திக் பாண்டியா அல்லது சாஹலாக இருக்கும். ஏற்கனவே, சஞ்சய் மஞ்சரேக்கர் கூறிய கருத்துக்கு, ரவீந்திர ஜடேஜா பதிலடி கொடுத்து ள்ளார். அதாவது, ஜடேஜா போன்று, அவ்வப்போது அணியில் இடம் பெறும் வீரர்களின் ரசிகன் தாம் அல்ல என்று தெரிவித்திருந்தார்.
வறுத்தெடுத்த ஜடேஜா
இந்த கருத்துக்கு, சமூக வலை தளத்தில் ஜடேஜா வெளுத்து வாங்கினார். நீங்கள் விளையாடியுள்ள போட்டிகளை காட்டிலும், 2 மடங்கு அதிகமான போட்டிகளில் விளையாடி உள்ளேன், சாதித்தவர்களுக்கு மதிப்பளிக்க கற்றுக் கொள்ளுங்கள் என்று பொரிந்து தள்ளிவிட்டார்.
அவதூறு பேச்சு
வீரர்களை மட்டுமல்ல.. அணியையும் சஞ்சய் மஞ்சரேக்கர் அவதூறாக பேசி வந்தார். குறிப்பாக, கடந்த ஐபிஎல் தொடரின்போது மும்பை அணிக்கு ஆதரவாக நடந்து கொண்ட சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளிட்ட அணிகளை கடுமையாக சாடினார். தோனியின் ஆட்டம் குறித்தும் அவதூறாக பேசினார்.
கொந்தளிக்கும் ரசிகர்கள்
தொடர் விமர்சனத்தால் அதிருப்தியடைந்த கிரிக்கெட் ரசிகர்கள் உலக கோப்பைக்கான வர்ணனையாளர் பணியில் இருந்து மஞ்ச ரேக்கரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். அது தொடர்பாக, கையெழுத்து இயக்கம் ஒன்றையும் தொடங்கி, 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையெழுத்து பெற்றுள்ளனர்.