
அதிரடி தகவல்கள்
அத்துடன் ஷமி பல்வேறு பெண்களுடன் இருக்கும் புகைப் படங்களையும் அவர் அனுப்பிய மெசேஜ்களின் தொகுப்புகளையும் வெளியிட்டார். அவர் வெளியிட்ட தகவல்களும், அது தொடர்பான செய்திகளும் பகீர் கிளப்பியது. கிரிக்கெட் உலகம் அதிர்ந்து மிரண்டது.

போலீசில் புகார்
கொல்கத்தா காவல்நிலையத்தில் ஷமி மீது மனைவி புகார் ஒன்றையும் அளித்து இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகளை ஷமி மறுத்திருந்தது தனிக்கதை. அதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்தனர்.

அரெஸ்ட் வாரண்ட்
அந்த வழக்கு அலிபூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, ஷமி மற்றும் அவரது சகோதரர் ஹசித் அகமதுவிற்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 15 நாட்களுக்குள் ஷமி நீதி மன்றத்தில் ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளது.

நீதி வேண்டி போராட்டம்
இந்நிலையில், இதுகுறித்து பேசிய ஷமியின் மனைவி ஹசின் ஜஹான் கூறி இருப்பதாவது: நீதித்துறை குறித்து பெருமிதம் கொள்கிறேன். ஓராண்டுக்கு மேலாக, நீதி வேண்டி போராடுகிறேன். தான் ஒரு பெரிய கிரிக்கெட் வீரர் என்ற மமதையிலும், அனைவரையும் விட மிகவும் சக்திவாய்ந்தவர் என்றும் ஷமி நினைத்து கொண்டிருக்கிறார் என்றார்.

கைது நடவடிக்கை?
தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில், ஷமி உள்ளார். அந்த தொடரும் முடிவடைந்து விட்டது. அவர் எப்போது இந்தியா வருகிறாரோ... அப்போது விமான நிலையத்தில் வைத்து கைது நடவடிக்கையை எடுக்க போலீசார் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications