
அதிக முறை
இதனால், இந்த ஜோடி முன்பு போல் இணைய முடியாமல் போனது. தற்போது அதற்கான மேலும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவுக்காக அதிக முறை சர்வதேச ஒருநள் போட்டியில் இணைந்து விளையாடிய ஜோடிகள் பட்டியலில் முதல் இடத்தில் சச்சின், கங்குலி ஜோடி 176 முறை இணைந்துள்ளது. சச்சின், சேவாக் ஜோடி 114 முறை இணைந்து இந்தப் பட்டியலில் 2வது இடத்திலும், ரோகித், தவான் ஜோடி 113 முறை இணைந்து விளையாடி இருக்கிறது.

இன்னும் 6 ரன்கள்
இன்றைய ஆட்டத்தின் மூலம், இந்த ஜோடி 2வது இடத்துக்கு முன்னேறும். மேலும் சர்வதேச ஒருநாள் போட்டியில், இந்த ஜோடி தற்போது 4994 ரன்கள் அடித்துள்ளது. தற்போது மேலும் 6 ரன்கள் அடித்தால், தவான், ரோகித் ஜோடி சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் 5 ஆயிரம் ரன்களை சேர்த்த ஜோடி என்ற சாதனையை படைக்கும்.

வெற்றி இல்லை
இதே போன்று ரோகித் சர்மா மேலும் 5 சிக்சர் விளாசினால், சர்வதேச ஒருநாள் போட்டியில் 250 சிக்சர் விளாசிய வீரர் என்ற பெருமையை பெறுவார். இந்திய அணி SENA என்று அழைக்கப்படும் தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகளில் நடைபெற்ற சர்வதேச ஒருநாள் தொடரில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் ஒரு தொடரை கூட கைப்பற்றியதில்லை.

வரலாற்றை மாற்றுமா?
இதனால், தவான், ரோகித், கோலி ஜோடிக்கு வயதாகி வருகிறது. இதுவே இங்கிலாந்தில் அவர்கள் கடைசியாக இணைந்து விளையாடும் சர்வதேச ஒருநாள் போட்டியாக இருக்கலாம். இதனால் இந்திய அணியின் மூவேந்தர்கள், இந்த சோக வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.


Click it and Unblock the Notifications











