
ஸ்கேன் பரிசோதனை
இதனை அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் களமிறங்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் விக்கெட் கீப்பர் கே எஸ் பரத் களத்திற்கு வந்தார். அப்போது தான் தெரிந்தது ஸ்ரேயாஸ்க்கு திடீரென்று முதுகு விலா பகுதியில் வலி ஏற்பட்டதால் அவர் நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கிறார் என்று. அங்கு அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

என்ன பிரச்சினை
ஏற்கனவே காயம் காரணமாக நியூசிலாந்து தொடரில் பங்கேற்காத நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு தான் திரும்பினார். தற்போது மீண்டும் அவருக்கு வலி ஏற்பட்டுள்ளதால் இன்றைய ஆட்டத்தில் அவர் பங்கேற்பாரா என்று தெரியவில்லை. மேலும் இது காயத்தால் ஏற்பட்ட வலியாக இருக்காது என்று கூறப்படுகிறது.

விளையாடுவாரா?
சிறுநீரக கற்கள் ஏற்பட்டு அதனால் வலி தாங்க முடியாமல் ஸ்ரேயாஸ் ஐயர் துடித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதி செய்யவே தற்போது ஸ்ரேயாஸ் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். வலி நிவாரணி மருந்துகளை எடுத்துக்கொண்டு ஸ்ரேயாஸ் களத்துக்கு வருவாரா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணி 113 ஒவர் முடிவில் 319 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகள் எடுத்து விளையாடி வருகிறது.

பின்னடைவு
தற்போது ஆஸ்திரேலியாவின் ஸ்கோரை விட 161 ரன்கள் பின்தங்கி இருக்கிறது. இந்திய அணி இன்று மட்டும் 300 ரன்கள் அடித்து விட்டால் ஆஸ்திரேலியா 150 ரன்கள் பின்தங்கிய நிலையில் கடைசி நாள் ஆட்டத்தை விளையாடும். இதனால் இந்திய அணிக்கு ஒரு வெற்றி வாய்ப்பு இருக்கும் என ரசிகர்கள் நம்பும் நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரின் காயம் ஒட்டுமொத்தமாகவே பின்னடைவை ஏற்படுத்தி விட்டது. ஒன்று ஜடேஜாவை பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்குவதும் கை கொடுக்கவில்லை.


Click it and Unblock the Notifications











