பெங்களூர் : நன்றாக ரன் குவித்தும் இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருப்பது தன் செயல்திறனை பாதிப்பதாக கூறியிருக்கிறார் இந்தியா “ஏ” அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது சேர்க்கப்பட்டாலும், இன்னும் அவருக்கு உறுதியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார்.