
பிரித்வி ஷா
பிரித்வி ஷா நல்ல திறமையான வீரராக இருக்கிறார் என்று கங்குலி பாராட்டியுள்ளார். ஐபிஎல் தொடரில் 63 போட்டியில் விளையாடி 1588 ரன்களை அவர் விளாசி இருக்கிறார். இதில் 12 அரைசதம் அடங்கும். அதற்கு அடுத்ததாக கங்குலி தேர்வு செய்த வீரர் ரிஷப் பண்ட். ரிஷப் பண்ட்க்கு 25 வயது தான் ஆகிறது.

ரிஷப் பண்ட்
ரிஷப் பண்ட் இதுவரை 98 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2838 ரன்களை அடித்துள்ளார். கடந்த சீசனில் 14 போட்டியில் விளையாடி 340 ரன்கள் அடித்திருக்கிறார். எனினும் விபத்து காரணமாக ரிஷப் பண்ட் நடப்பு தொடரில் விளையாட மாட்டார்.

ருத்துராஜ்
அடுத்ததாக கங்குலி லிஸ்டில் இருப்பவர் சிஎஸ்கே வீரர் ருத்துராஜ் கெய்க்வாட .இதுவரை 36 போட்டியில் விளையாடியுள்ள ருத்துராஜ் கெய்க்வாட் 1207 ரன்களை அடித்ததுடன், அதிவேகமாக ஆயிரம் ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சச்சினின் சாதனையை சமன் செய்தார். ஆரஞ்ச் நிற தொப்பி வென்றுள்ள ருத்துராஜ், ஒரு சதம், 10 அரைசதம் அடித்துள்ளார்.

சுப்மன் கில்
சுப்மன் கில் பெயரை மறநதுவிட்டேன். அவர் சிறந்த பேட்ஸ்மேனாக ஐபிஎல் தொடரில் லிப்பார் எனறு கங்குலி கூறினார். கங்கலியின் இந்த லிஸ்டில் ஒரே ஒரு வேகப்பந்துவீச்சாளரான உம்ரான் லிக் மட்டும் இருக்கிறார். உம்ரான் மாலிக் உடல் தகுதியுடன் இருந்தால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











