
பெரிதாகும் ஐபிஎல்
இந்தியாவை பொறுத்தவரை ஐபிஎல் போட்டிகளை இனி வரும் காலங்களில் பெரிதாக நடத்தி, அதன் மூலம் லாபம் மேற்கொள்ள காய் நகர்த்தியது. அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை மூலம் பிசிசிஐ 40 ஆயிரம் கோடிக்கு மேல் அள்ளியது. மேலும் அடுத்த 5 ஆண்டுகளில் ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கை உயர உள்ளது.

எத்தனை போட்டிகள்
2023 ஆம் ஆண்டு மற்றும் 2024ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் எண்ணிக்கை 74 ஆகவும், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டு 84 போட்டிகளும், 2027ஆம் ஆண்டு 94 போட்டிகளாகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளது. இந்த அளவுக்கு போட்டிகளை நடத்த, அதற்கு ஏற்ப நேரம் வேண்டும். மற்ற நாட்டு வீரர்களும் முழுமையாக தொடரில் விளையாட வேண்டும்.

2 மாதம்
இதற்காக, ஐபிஎல் போட்டிகள் நடத்த இரண்டரை மாதங்கள் பிரத்யேக காலம் வேண்டும் என்றும், அந்த நேரத்தில் மற்ற சர்வதேச போட்டிகள் நடத்த கூடாது என்றும் பிசிசிஐ கோரிக்கை வைத்தது. அதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மார்ச் மாதம் இறுதி வாரத்திலிருந்து, ஜூன் மாதம் முதல் 10 நாள் வரை எந்த கிரிக்கெட் போட்டிகளையும் நடத்தவில்லை என்று ஐசிசி ஒப்புகொண்டது.

மற்ற நாடுகளுக்கும் அனுமதி
இதே போன்று டிசம்பர் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவும், பிப்ரவரி மார்ச் மாதம் பாகிஸ்தானும், ஆகஸ்ட் மாதம் இங்கிலாந்தும், செப்டம்பர் மாதம் வெஸ்ட் இண்டிஸ் அணிகளும் அவர்கள் நாடு நடத்தும் டி20 தொடருக்காக எந்தப் போட்டியிலும் பங்கேற்கவில்லை. இதற்கு தகுந்தால் போல் ஐசிசி அட்டவணையை தயாரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











