
ஸ்ரீசாந்த், அஜீத் சண்டிலா, அங்கீத் சவான் ஆகியோருடன் கைதான புக்கிகளிடம் இதுகுறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது டெல்லி போலீஸ். 15 போட்டிகள் மீது தற்போது சந்தேகம் எழுந்துள்ளது போலீஸுக்கு. இவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தவிர வேறு சில அணிகளும் விளையாடிய போட்டிகளாகும்.
பல்வேறு மாநிலங்களிலும் உள்ள புக்கிகள் ஒருங்கிணைந்து ஒரு பெரிய சிண்டிகேட் அமைத்து இந்த பெட்டிங்கில்ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் நம்புகிறார்கள். இந்த நெட்வொர்க் மிகப் பெரியது என்றும் போலீஸார் கருதுகிறார்கள்.