மும்பை: ஐபிஎல் சீசன் 3 தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 12ம் தேதி ஹைதராபாத்தில் துவங்கும் என அந்த அமைப்பின் தலைவர் லலித் மோடி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் தென் ஆப்ரிக்காவில் நடந்த ஐபிஎல் சீசன் 2 தொடரில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கோப்பை வென்றது. இந்நிலையில் ஐபிஎல் தலைவர் லலித் மோடி மூன்றாவது தொடருக்கான அறிவிப்பை வெளியி்ட்டுள்ளார்.இத் தொடர் அடுத்தாண்டு மார்ச் 12ம் தேதி ஹைதராபாத்தில் துவங்குகிறது. முதல் போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.போட்டிகள் ஹைதராபாத், நாக்பூர், விசாகப்பட்டிணம், அகமதாபாத், தர்மசாலா ஆகிய இடங்களில் நடக்கிறது. முதல் இரண்டு சீசன்களிலும் 59 ஆக இருந்த மொத்த போட்டிகளின் எண்ணிக்கை தற்போது 60 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடுதலாக மூன்றாவது இடத்துக்கான அணியை தேர்வு செய்யும் போட்டி நடக்கிறது. இதில் இரண்டு அரையிறுதியில் தோல்வியடையும் அணிகள் மோதுகின்றன.இது குறித்த லலித் மோடி கூறுகையில், இந்த தொடர் 45 நாட்கள் நடக்கும். 2011ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் சீசன் 4 தொடரில் மேலும் இரண்டு அணிகளை சேர்க்க திட்டமிட்டுள்ளோம் என்றார் லலித் மோடி.