Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புற்றுநோயிடம் வாழ்க்கையை இழந்து விடக் கூடாது, போராட வேண்டும்- சச்சின்

Sachin Tendulkar
ஹைதராபாத்: ஹைதராபாத்தில் கட்டப்பட்டுள்ள புற்றுநோய் சிகிச்சை மற்றும் நல மையத்தை கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் திறந்து வைத்தார்.

டாக்டர்கள் நாகேஸ்வர் ரெட்டி, பிரதீக் சர்மா ஆகியோர் இணைந்து இந்த மையத்தை உருவாக்கியுள்ளனர். இந்த மருத்துவமனைக்கு கிப்ட் என்று பெயர் சூட்டப்படடுள்ளது.

நிகழ்ச்சியில் சச்சின் பேசுகையில், கிப்ட் என்று அருமையாக பெயர்வைத்துள்ளனர். இந்த மருத்துவமனை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்துள்ள கிப்ட் போல. வாழ்க்கை வாழ்வதற்கே. அந்த வாழ்க்கையை புற்றுநோயிடம் தோற்று விடாமல் போராடி வெல்ல வேண்டும்.

இங்கு வரும் அனைவரும் சுதந்திரமாக வாழ வேண்டும், நிம்மதிப் பெருமூச்சு விட வேண்டும். அதற்கு மருத்துவர்கள் சிறந்த சிகிச்சையை வழங்க வேண்டும் என்றார் சச்சின்.

Story first published: Wednesday, March 6, 2013, 12:54 [IST]
Other articles published on Mar 6, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+