For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரஞ்சி போட்டியிலிருந்து திடீரென விலகினார் சச்சின்!

Sachin Tendulkar
மும்பை: ரஞ்சிக் கோப்பைப் போட்டியிலிருந்து விலகியுள்ளார் சச்சின் டெண்டுல்கர்.

இழந்த பார்மைத் திரும்பப் பெற கடு்மையாக போராடி வரும் சச்சின், சர்வதேச போட்டிகளில் ரன் எடுக்கத் திணறிக் கொண்டிருக்கிறார். இதனால் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அவர் ஓய்வு பெற வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்தநிலையில் அவர் ரஞ்சிப் போட்டிக்கான மும்பை அணியில் சேர்க்கப்படவில்லை. அவரே விலகி விட்டாராம்.

மும்பை அணி டிசம்பர் 22ம் தேதி மத்தியப் பிரதேசத்துடன் மோதவுள்ளது. இதற்கான அணியில் சச்ிசன் சேர்க்கப்படவில்லை. அதேசமயம், ஜாஹிர் கான் இணைந்துள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர் ரஞ்சிப் போட்டியில் சச்சின் ஆடினார். அதில் அவர் ஒரு சதமும் போட்டார். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக பட்டையைக் கிளப்புவார் சச்சின் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ரசிகர்களைக் கைவிட்டு விட்டார்.

ஒரு சதம் கூடப் போடாமல் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு டெஸ்ட் போட்டித் தொடரை முடித்தார் சச்சின். மொத்தமே இந்த நான்கு போட்டிகளிலும் அவர் 112 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இந்த நிலையில் ரஞ்சிப் போட்டியிலிருந்து அவர் விலகியுள்ளார். விலகலுக்கான காரணம் தெரியவில்லை.

Story first published: Thursday, December 20, 2012, 15:07 [IST]
Other articles published on Dec 20, 2012
English summary
Sachin Tendulkar, struggling for runs in international cricket, has now opted not to play Ranji Trophy for Mumbai as they face Madhya Pradesh in their next game starting on December 22. However, Mumbai have been boosted by the return of left-arm speedster Zaheer Khan.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+