
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் மொத்தம் 27 அணிகள் கலந்து கொண்டன. இறுதிப் போட்டிக்கு சவுராஷ்டிரா மற்றும் மும்பை அணிகள் தகுதி பெற்றுள்ளன.
78 ஆண்டுகால ரஞ்சி கோப்பை வரலாற்றில் மும்பையின் ஆதிக்கமே நீடித்து வருகிறது. மொத்தம் 39 முறை கோப்பையை வென்றுள்ளது மும்பை அணி. 44 முறை இறுதி சுற்றுப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது மும்பை அணி.
75 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள சவுராஷ்டிரா அணியும் ஓரளவு பலம் வாய்ந்த அணியாகவே திகழ்கிறது.
மும்பையின் சாதனை தொடருமா? சவுராஷ்டிரா சரித்திரம் படைக்குமா?