ஷ்ஷப்பா.. இந்த 200வது டெஸ்ட் போட்டியோடு சச்சின் ரிடையர் ஆயிருவாராப்பா...?
டெல்லி: எப்பப்பா ஓய்வு என்று கிட்டத்தட்ட எல்லோராலும் கேட்கப்பட்டு வரும் சச்சின் டெண்டுல்கர், தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
வரும் நவம்பர் மாதத்தில் 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 5 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாட வருமாறு மேற்கிந்திய தீவுகள் அணியை அழைத்துள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை அடுத்து அனைவரின் கவனமும் சச்சின் டெண்டுல்கர் மீது திரும்பி உள்ளது.

200வது டெஸ்ட்
சச்சின் இதுவரை 198 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். வரும் நவம்பரில் மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் போட்டியில் கலந்து கொண்டு 200வது டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற பெறுமையை பெறுவார்.

ஓய்வு எப்பொழுது?
சச்சின் மேற்கிந்திய தீவுகளுடனான போட்டித் தொடர் முடிந்த பிறகு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

கடைசி சதம்
சச்சின் கடந்த 2011ம் ஆண்டு ஜனவரி மாதம் கேப் டவுனில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும்போது சதம் அடித்தார். அதன் பிறகு அவர் இதுவரை சதம் அடிக்கவில்லை.

ஓடிஐ
டெண்டுல்கர் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு பெறும் மூடில் இல்லை
ஆனால் 200வது டெஸ்ட் போட்டியில் விளையாடினாலும் கூட கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் சச்சினுக்கு இல்லையாம். அவர் தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு தயாராகிக் கொண்டிருக்கிறாராம்.
வெயில் ரொம்ப ஜாஸ்தியாத்தான் இருக்கு...!!


Click it and Unblock the Notifications