
அரசியல்
எதுவும் வேலைக்கு ஆகவில்லை என்றதும் பாஜகவில் சேர்ந்து அரசியலில் தீவிரம் காட்டினார். ஆனால் அரசியலிலும் இவருக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கவில்லை. பாஜகவில் இவர் உறுப்பினராக உள்ள நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் 9 வருடங்களுக்கு பின் ஆட தொடங்கி உள்ளார்.

மீண்டும் ஆடி வருகிறார்
சையது முஷ்டாக் கோப்பை போட்டிக்கான கேரளா அணியில் ஸ்ரீசாத் சேர்க்கப்பட்டடார். கேரளா அணிக்காக ஆடிய இவர் சிறப்பாக பந்து வீசி கவனம் ஈர்த்தார். இந்த நிலையில் ஸ்ரீசாந்த் மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் ஆட உள்ளார். இதற்காக ஐபிஎல் ஏலத்தில் ஸ்ரீசாந்த் பதிவு செய்துள்ளார்.

பதிவு
தற்போது 39 வயதாகும் ஸ்ரீசாந்த் சிறப்பாக பந்து வீசுவதால், இவரை ஏலத்தில் எடுக்க மூன்று அணிகள் விருப்பம் தெரிவித்துள்ளது என்கிறார்கள். அதன்படி ராஜஸ்தான் அணி இவரை ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. ராஜஸ்தான் அணியின் கேப்டனாக கேரளாவை சேர்ந்த சஞ்சு சாம்சன் உள்ளார். இதனால் இவர் ஸ்ரீசாந்தை அணியில் எடுக்க வாய்ப்புள்ளது.

கேப்டன்
சஞ்சு சாம்சனின் கேப்டன்சியின் கீழ்தான் சையது முஷ்டாக் கோப்பையில் ஸ்ரீசாந்த் ஆடினார். இதனால் ஸ்ரீசாந்தை ராஜஸ்தான் அணி ஏலம் எடுக்க வாய்ப்புள்ளது. அந்த அணியிலும் கூட ஜோப்ரா ஆர்ச்சருக்கு ஜோடியாக பவுலிங் செய்ய ஸ்பீட் பவுலர் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை
இதுபோக பெங்களூர் மற்றும் சென்னை அணிகள் இவரை எடுக்க வாய்ப்புள்ளது. உமேஷுக்கு மாற்றாக ஸ்ரீசாந்தை பெங்களூர் அணி எடுக்க வாய்ப்புள்ளது. அதேபோல் ரெய்னாவின் பரிந்துரை காரணமாக சென்னை அணியும் இவரை எடுக்க திட்டமிடும் என்று கூறுகிறார்கள் .


Click it and Unblock the Notifications











