திணறும் ஹைதராபாத்
மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணியான ஹைதராபாத், இந்த சீசனின் துவக்கத்தில் மிகவும் அபாரமாக விளையாடி, அனைத்து அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. முதல் 11 ஆட்டங்களில் 9ல் வென்றது. ஆனால், கடைசியாக விளையாடிய 4 ஆட்டங்களிலும் தோல்வி கண்டுள்ளது.
தினேஷ் அபாரம்
தமிழரான தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொல்கத்தா, இந்த சீசனில் பாதி ஆட்டங்கள் முடிந்திருந்த நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுமா என்ற சந்தேகம் இருந்தது. மும்பையிடம் 102 ரன்களில் மிகப் பெரிய தோல்வி அடைந்தது. ஆனால், அதன்பிறகு தொடர்ந்து 4 ஆட்டங்களில் வென்றது.
ரஷீத் கான் அதிரடி
இந்த நிலையில் இன்று நடந்த இரண்டாவது தகுதிச் சுற்று ஆட்டத்தில் டாஸ் வென்ற கொல்கத்தா பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. சாகா 35, ஷிகார் தவான் 34, ஷாகிப் அல் ஹசன் 28 ரன்கள் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் பவுலர் ரஷீத் கான் 10 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 34 ரன்கள் எடுத்தார்.
பைனல்சில் ஹைதராபாத்
175 ரன்கள் வெற்றி இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியுள்ளது. கிறிஸ் லைன் 48,சுனில் நரேன் 26, ரானா 22 ரன்கள் எடுத்தனர். கடைசியில் போராடிய ஷப்னம் கில் 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். மிகவும் வலுவான பவுலிங் கொண்ட அணி என்பதை ஹைதராபாத் மீண்டும் நிரூபித்தது. கொல்கத்தாவை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை வீழ்த்தி 161 ரன்களுக்கு சுருட்டியது. இதன் மூலம் 13 ரன்களில் வென்று பைனல்ஸ் நுழைந்தது ஹைதராபாத். ரஷீத் கான் பேட்டிங்கில் கலக்கியதுடன், 3 விக்கெட்களையும் வீழ்த்தினார். மேலும் 2 கேட்ச்களையும் பிடித்தார்.