கொழும்பு: இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்தா சமீராவுக்கு ஏற்பட்டுள்ள முதுகெலும்பு விரிசல் காயத்தால் 4 மாதங்கள் ஓய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்டில் இலங்கை இன்னிங்ஸ் மற்றும் 88 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது. இருப்பினும் சமீரா இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்ட அவருக்கு எம்ஆர்ஐ, சிடி ஸ்கேன்கள் எடுக்கப்பட்டன. அப்போது, முதுகெலும்பில் விரிசல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு 4 மாதங்கள் ஓய்வு எடுக்க டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். சமீராவும், தோள்பட்டை காயத்தால் அவதிப்படும் மற்றொரு சக நாட்டு பவுலர் தம்மிகா பிரசாத்தும், இலங்கை திரும்பியுள்ளனர்.