
கூடுதல் ரன்கள்
இந்த நிலையில், 2 வார ஓய்வுக்கு பிறகு கிரிக்கெட் களத்திற்கு திரும்பியுள்ள முகமது ஷமி பந்தை சரியான லைனில் வீசாமல் தடுமாறினார். இதனால் பந்து அங்கும், இங்கும் சென்றது. இதனை கணித்து பந்தை பிடிக்க முடியாமல் விக்கெட் கீப்பர் பரத் தடுமாறினார். இதனால் முதல் 5 ஓவரில் மட்டும் இந்திய அணி கூடுதல் ரன்களாக 11 தரப்பட்டது.

கவாஸ்கர் விமர்சனம்
அப்போது கிரிக்கெட் வர்ணணையில் இருந்த கவாஸ்கர், இந்திய அணி நிர்வாகத்தை கடுமையாக வறுத்து எடுத்தார். முகமது ஷமி தொடர்ந்து பந்துவீசினால் தான் அவர் அபாயகரமான வீரராக இருப்பார் என்றும், 2வது டெஸ்ட்டுக்கும், 3வது டெஸ்ட்க்கும் 10 நாட்களுக்கு மேல் இடைவெளி இருந்தும், 3வது டெஸ்டில் ஷமிக்கு ஓய்வு வழங்கப்பட்டது முட்டாள் தனமான முடிவு என்று கவாஸ்கர் விமர்சித்துள்ளார்.

கேள்வி
ஓய்வு வழங்கப்பட்டதன் மூலம் முகமது ஷமி தன்னுடைய பந்துவீச்சின் லைன் மற்றும் லெங்த்தை தவறவிட்டதாகவும் கூறினார். முகமது ஷமி போன்ற வீரரை ஒரு தொடர் முழுவதும் பயன்படுத்த வேண்டும் என்று கவாஸ்கர் வலியுறுத்தினார். இதனைத் தொடர்ந்து பேசிய முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்த்ரி, பந்துவீச்சில் முகமது ஷமி தடுமாறி வருவதாக கூறினார்.

ரவி சாஸ்த்ரி கருத்து
முகமது ஷமி போர் குதிரை போல் எப்போதும் உழைத்து கொண்டு இருக்கும் வீரர் என்றும், அவர் தொடர்ந்து பந்துவீசினால் மட்டுமே சரியான முறையில் அவர் பந்துவீசுவார் என்றும் ரவி சாஸ்த்ரி கூறினார். இதே போன்று போட்டியின் போதே முகமது ஷமிக்கு நீண்ட ஓவர்களை தொடர்ந்து வீசி பயன்படுத்த வண்டும் என்று குறிப்பிட்டார். வெறும் 3 அல்லது 4 ஓவர் மட்டுமே முகமது ஷமிக்கு ஸ்பெல் பயன்படுத்தினால், அவருடைய ரிதம் மிஸ் ஆகும் என்றும் ரவி சாஸ்த்ரி கூறினார்.


Click it and Unblock the Notifications











