
ஏப்ரல் 9ம் தேதி துவக்கம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல் 9ம் தேதி துவங்கி மே மாதம் 30ம் தேதிவரையில் இந்தியாவின் 6 இடங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி 8 ஐபிஎல் அணிகளும் தங்களது பயிற்சிகளை துவங்கி நடத்தி வருகின்றன. இந்த சீசனில் ஹோம் அட்வான்டேஜ் கொடுக்கப்படாத நிலையில் அதையொட்டி அணிகள் பயிற்சிகளை திட்டமிட்டு வருகின்றன.

தோனி உள்ளிட்டோர் பங்கேற்பு
ஐபிஎல் தொடரையொட்டி கடந்த சில தினங்களாக சென்னை சிதம்பரம் மைதானத்தில் தங்களது பயிற்சிகளை சிஎஸ்கே அணி துவங்கி நடத்தி வருகிறது. இதில் கேப்டன் எம்எஸ் தோனி, அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சில புதிய வீரர்களும் இணைந்து பயிற்சி மேற்கொண்டனர்.

சிஎஸ்கே நடவடிக்கை
இன்னிலையில் ஹோம் அட்வான்டேஜ் இல்லாத நிலையில் தங்களது பயிற்சிகளை மும்பைக்கு மாற்ற சிஎஸ்கே நிர்வாகம் முடிவெடுத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் சில தினங்களில் அங்கு பயிற்சிகளை சிஎஸ்கே அணி துவக்கவுள்ளது. இதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.

ரெய்னா மும்பை பயணம்
இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற இந்த பயிற்சிகளில் சுரேஷ் ரெய்னா பங்கேற்கவில்லை. இது பல்வேறு கேள்விகளை ஏற்படுத்திய நிலையில், வரும் 26ம் தேதி மும்பையில் அவர் பயிற்சிகளில் ஈடுபடுவார் என்றும் விஸ்வநாதன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் ரெய்னா சிஎஸ்கே அணியில் இணையும்வகையில் மும்பைக்கு தனது பயணத்தை துவக்கியுள்ளார்.

உற்சாக போஸ்
அவர் விமானநிலையத்தில் இருப்பது போன்ற புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. தன்னுடைய லக்கேஜ் உள்ளிட்டவற்றுடன் அவர் கையாட்டி உற்சாகமாக போஸ் கொடுக்கிறார். கடந்த சீசனில் விளையாடாத சின்ன தல-யை வரவேற்க சிஎஸ்கே மட்டுமின்றி அதன் ரசிகர்களும் தற்போது தயாராகி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











