
15 ரன்கள் பாக்கி
சுரேஷ் ரெய்னா, நடப்பு சீசனில் பல்வேறு சாதனைகளை படைக்க உள்ளார். அவர் இன்னும் 15 ரன்கள் அடித்தால் ஐபிஎல் தொடரில் 5,000 ரன்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைப்பார்.

200 சிக்சர்கள்
அத்துடன் 15 சிக்சர்கள் அடித்தால் 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். இன்னும் 5 கேட்ச்கள் பிடித்தால் 100 கேட்ச் பிடித்த வீரர் என்ற சாதனையும் ரெய்னா படைக்க உள்ளார்.

அரைசதங்கள்
மேலும், அதிக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் கவுதம் கம்பீர், டேவிட் வார்னர் ஆகியோர் தலா 36 அரைசதங்களுடன் முதல் இரண்டு இடத்தில் உள்ளனர்.

முதலிடம் பிடிப்பாரா?
35 அரைசதங்களுடன் ரெய்னா 2-வது இடத்தில் இருக்கிறார். ஆகவே... இந்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைக்க ரெய்னாவுக்கு அதிக வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications