எப்படி
ரெய்னாவின் இந்த கைது பெரிய அளவில் சர்ச்சையானது. கடந்த சில நாட்களாக ரெய்னா சர்ச்சையில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த ஐபிஎல் போட்டியில் ரெய்னா ஆடவில்லை.
குடும்பம்
இவரின் குடும்ப உறுப்பினர்கள் சிலர் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட காரணத்தாலும், சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட மோதலாலும் ரெய்னா இந்தியா திரும்பினார். இந்த நிலையில் அடுத்த சீசனில் ரெய்னா சென்னை அணிக்கு ஆடுவாரா என்று கேள்வி நிலவியது.
பதில்
இவரை சிஎஸ்கே அணி நிர்வாகமே கழட்டி விட போகிறது என்றும் கூட செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மூத்த வீரர் ரெய்னாவை நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரெய்னா தொடர்ந்து அணியில் நீடிப்பார்.
மாற்றம் இல்லை
அவர் கைது குறித்து செய்தியில் மட்டுமே படித்தோம். இதற்கும் ஐபிஎல்லிற்கும் தொடர்பு இல்லை. அவர் நீக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை, என்று சிஎஸ்கே அணி நிர்வாகம் கூறியுள்ளது. இதனால் அடுத்த வருடமும் சிஎஸ்கே அணியில் ரெய்னா கண்டிப்பாக ஆடுவார் என்பது உறுதியாகி உள்ளது.