For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“சுத்த முட்டாள்தனமான கேப்டன்சி இது” ரோகித் சர்மா செய்த தவறு.. கவுதம் கம்பீர் கடும் விளாசல் - காரணம்

பெர்த்: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முட்டாள்தனமான முடிவுகளை எடுப்பதாக முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விளாசியுள்ளார்.

இரு அணிகளும் பெர்த் மைதானத்தில் மோதிய இந்த போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலிலும் 2வது இடத்திற்கு சென்றது.

இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு ஃபீல்டிங் ஒருபுறம் முக்கிய காரணமாக இருந்தாலும், மற்றொரு புறம் பேட்டிங் சொதப்பல்களும் முக்கிய காரணமாக இருந்தது.

இந்தியாவின் தோல்வி

இந்தியாவின் தோல்வி

பெர்த் போன்ற களத்தில் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்களை சமாளிக்க வேண்டும் என்றால் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் தான் இந்திய அணி விளையாட வேண்டியிருந்தது. அதற்கேற்றார் போல தான் ஸ்பின்னர் அக்‌ஷர் பட்டேலை நீக்கிவிட்டு, தீபக் ஹூடாவை கொண்டு வந்தனர். ஆனால் அவர் ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட்டாகி ஏமாற்றினார்.

கம்பீர் கடும் விமர்சனம்

கம்பீர் கடும் விமர்சனம்

இந்நிலையில் ரோகித்தின் முடிவு குறித்து கவுதம் கம்பீர் கடுமையாக விமர்சித்துள்ளார். அதில், டாஸின் போது அணியில் தீபக் ஹூடாவை கொண்டு வந்தது ஆச்சரியமாக இருந்தது. எனினும் அவரை எதற்காக ப்ளேயிங் 11ல் கொண்டு வந்துள்ளோம் என்பது குறித்து கேப்டன் ரோகித் விளக்கமே தரவில்லை. நானாக ஒரு யோசனைக்கு வந்துவிட்டேன்.

முட்டாள்தனமான முடிவு

முட்டாள்தனமான முடிவு

அதாவது தென்னாப்பிரிக்க அணியில் இடதுகை வீரர்கள் இருப்பதால், தீபக் ஹூடா பவுலிங்கில் தாக்கம் ஏற்படுத்துவதற்காக சேர்த்தனர் என நினைத்தேன். ஆனால் ஹூடாவுக்கு பவுலிங் வாய்ப்பே கொடுக்கவில்லை. பேட்ஸ்மேனாக பயன்படுத்தினால், ரிஷப் பண்ட்-ஐ கொண்டு வந்திருக்க வேண்டியது தானே. எதற்காக முட்டாள் தனமாக ஹூடாவை கொண்டு சென்றார் என புரியவே இல்லை என கம்பீர் விமர்சித்துள்ளார்.

அடுத்த ஆட்டம்

அடுத்த ஆட்டம்

இந்திய அணி அடுத்ததாக வங்கதேச அணியை எதிர்கொள்ளவுள்ளது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த மைதானம் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ரிஷப் பண்ட் கண்டிப்பாக சேர்க்கப்படுவார் எனத் தெரிகிறது.

Story first published: Monday, October 31, 2022, 16:28 [IST]
Other articles published on Oct 31, 2022
English summary
Former Indian cricketer Gautam Gambhir slams Rohit sharma for his poor captaincy in India vs south africa match of t20 world cup 2022
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+