நியூயார்க் : 2024 டி20 உலக கோப்பை தொடருக்கு முன் இந்திய அணி, வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது. இந்த பயிற்சி போட்டிக்காக இந்திய வீரர்கள் தயாராகி வந்தனர். அப்போது வலைப் பயிற்சியில் ஹர்திக் பாண்டியாவுக்கு போட்டியாக இந்திய அணியில் இடம் பெற்றுள்ளதாக சொல்லப்படும் சிவம் துபேவுக்கு ரோஹித் சர்மா சிறப்பு பந்துவீச்சு பயிற்சியை அளித்தார். இது ரசிகர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஜாம்பவான் தோனியால் பட்டை தீட்டப்பட்டவர் தான் சிவம் துபே. அவர் சிஎஸ்கே அணியில் இடம் பெறுவதற்கு முன் சராசரியான பேட்ஸ்மேனாகவும், சராசரியான வேகப் பந்துவீச்சாளராகவும் இருந்தார். அவரை முழு நேர பேட்ஸ்மேனாக மாற்றினார் தோனி.

இந்திய அணிக்கு ஆப்பு வைக்கப் போகும் ரோஹித் சர்மா - ஹர்திக் பாண்டியா மோதல்.. எச்சரித்த ஹர்பஜன் சிங்
ஹர்திக் பாண்டியா இந்திய அணியில் துணை கேப்டனாக இடம்பெற்று இருக்கிறார். அவரை அணியை விட்டு நீக்குவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று. அதேசமயம் ஒரே போட்டியில் ஹர்திக் பாண்டியா மற்றும் சிவம் துபே என இருவரையும் ஆட வைக்க முடியும். அப்படி நடந்தால் அது ஹர்திக் பாண்டியாவுக்கு மறைமுகமாக அழுத்தத்தை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பையின் இடையே காயத்தில் சிக்கினால் அப்போது சிவம் துபே அவரது இடத்தை பிடிப்பார்.