அகமதாபாத்: 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மாபெரும் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது. இந்த உலகக் கோப்பை தொடருக்காக ஐசிசி மொத்தம் 11.25 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசுத் தொகையை ஒதுக்கியிருந்தது. இதில் பங்கேற்ற 20 அணிகளுக்கும் அவர்களின் தரவரிசை மற்றும் வெற்றிகளின் அடிப்படையில் பரிசுத்தொகை பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டி20 உலகக் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்ட இந்திய அணி, இந்தத் தொடரின் வெற்றியாளராகக் கிரீடம் சூடியது. இதற்காக இந்திய அணிக்கு அதிகபட்சமாக 2.64 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 25 கோடி ரூபாய்) பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையில் இதுவே மிக அதிகப் பங்காகும்.

இறுதிப் போட்டியில் தோல்வியடைந்து இரண்டாம் இடத்தைப் பிடித்த நியூசிலாந்து அணிக்கு 1.42 மில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 13 கோடி ரூபாய்) பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அரையிறுதியில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கும் கணிசமான தொகை கிடைத்துள்ளது.

இந்த முறை ஐசிசி உலகக் கோப்பையில் பங்கேற்ற அனைத்து 20 அணிகளுக்கும், அவை தொடரில் எந்த நிலை வரை முன்னேறின என்பதைப் பொறுத்துப் பரிசுத்தொகையை வழங்கியுள்ளது. அதன் முழு விவரம் இதோ:
இந்தத் தொடரில் பங்கேற்று லீக் சுற்றுடன் வெளியேறிய அணிகளுக்கும் குறைந்தபட்சமாகத் தலா 2.25 லட்சம் டாலர்கள் (சுமார் 2 கோடி ரூபாய்) வழங்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கிரிக்கெட் விளையாடும் நாடுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், வீரர்களின் நிதி ஊக்கத்தை மேம்படுத்தவும் ஐசிசி இந்தத் தொகையை வழங்கியுள்ளது. இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதோடு மட்டுமல்லாமல், பெரிய அளவிலான பரிசுத்தொகையையும் வென்று தனது ஆதிக்கத்தை மீண்டும் ஒருமுறை நிலைநிறுத்தியுள்ளது.