
சென்னை
இங்கிலாந்திற்கு எதிராக நடைப்பெற உள்ள கிரிக்கெட் தொடரில் இரண்டு முக்கியமான போட்டிகள் சென்னையில் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.முதல் டெஸ்ட் போட்டி சென்னையில் பிப்ரவரி 5ம் தேதி நடக்கும். இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சென்னையில் 13ம் தேதி நடக்க உள்ளது.

டெஸ்ட் போட்டிகள்
3வது டெஸ்ட் போட்டி 24ம் தேதி பிப்ரவரி மாதம் நடக்க அஹமதாபாத்தில் உள்ளது. 4வது டெஸ்ட் போட்டி 4ம் தேதி மார்ச் மாதம் அஹமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் டி 20 தொடர் முழுக்க மார்ச் 12 முதல் 20ம் தேதி வரை அகமதாபாத்தில் நடக்க உள்ளது. அதன்பின் புனேவில் 3 ஒருநாள் போட்டிகளும் மார்ச் மாதத்தில் இருந்து நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது .

வீரர்கள்
இந்த நிலையில், இந்த கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். இன்று நடந்த பிசிசிஐ கூட்டத்திற்கு பின் இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளார். அதன்படி விராட் கோலி, ரோஹித் சர்மா, சுப்மான் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே, பாண்ட், சாகா, பாண்டியா, கே. எல் ராகுல், பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷரத்துல் தாக்கூர், அஸ்வின், குல்தீப், வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜடேஜா
இந்திய டெஸ்ட் அணியில் காயம் காரணமாக ஷமி, ஜடேஜா, புவனேஷ்வர் குமமர், உமேஷ் யாதவ் இடம்பெறவில்லை. அதேபோல் சைனி, நடராஜன் ஆகியோரும் அணியில் இடம்பெறவில்லை. சைனி காலில் ஏற்பட்ட காயத்தால் அணியில் எடுக்கப்படவில்லை. நடராஜன் டெஸ்ட் வீரர் இல்லை என்பதால் அவரும் அணியில் எடுக்கப்படவில்லை.

அறிமுக டெஸ்ட்
அறிமுக டெஸ்ட் போட்டியில் நடராஜன் நன்றாக பவுலிங் செய்தாலும் அவர் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக செயல்படவில்லை. அதேபோல் இவர் டி 20 ஸ்டைல் வீரர் என்பதால் டெஸ்ட் போட்டிக்கு தேர்வாகவில்லை. இந்திய ஒருநாள், டி 20 அணிகள் அறிவிக்கப்படும் போது அதில் நடராஜன் இடம்பெற வாய்ப்புள்ளது என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











