
சாதிப்பாரா ரோகித்?
கடந்த 2013ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் இருந்து வருகிறது. நீண்ட நாட்களாக போராடி வந்த விராட் கோலியும் கேப்டன்சி பதவியில் இருந்தே விலகிவிட்டார். அவரின் தலைமையில் கடந்த முறையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரை முன்னேறி இந்திய அணி ஏமாற்றம் கண்டது. எனவே இந்த முறை அதை ரோகித் சர்மாவாவது நிறைவேற்றி வைப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.

புதிய சிக்கல்
என்னதான் ஆஸ்திரேலிய அணியை இந்தியா தற்போது வென்றிருந்தாலும், டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெல்வது சற்று கடினமாகும். ஏனென்றால் ஐபிஎல் தொடர் சிக்கலாக அமைந்துள்ளது. நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மே 28ம் தேதி வரை போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது முடிந்த ஒரே வாரத்தில் ஆஸ்திரேலியாவுடனான இறுதிப்போட்டி நடக்கவுள்ளது.

பிசிசிஐ சமாளிக்குமா?
இங்கிலாந்து நாட்டின் ஆடு களத்தில் அதிகப்படியான ஸ்விங்கும், பவுன்ஸும் இருக்கும். அங்குள்ள சூழல்களுக்கு ஏற்றவாறு தயாராக குறைந்தபட்சம் 2 வாரத்திற்கு முன்பு இருந்தே பயிற்சியை தொடங்க வேண்டும். ஆனால் ஐபிஎல்-ல் 28ம் தேதி வரை விளையாடும் வீரர்கள், எப்படி ஒரு வாரத்திற்குள் தயாராவது என்ற கேள்வி உள்ளது. டி20 மனநிலையுடன் இருக்கும் அவர்கள், டெஸ்ட் போன்ற நிதானமான ஃபார்மெட்டிற்கு மாற வேண்டும்.

ஒரே ஒருவர் எஸ்கேப்
சீனியர் வீரர் சட்டீஸ்வர் புஜாராவை தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஐபிஎல் போட்டிகளில் விளையாடவுள்ளனர். இதனால் அதிக பணிச்சுமைகளுக்கும், காயங்களுக்கும் வாய்ப்புகள் இருக்கும். எனவே அந்த சவால்களை எப்படி சமாளித்து அணியை உருவாக்கவுள்ளனர் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். குறிப்பாக ரோகித் சர்மா, விராட் கோலி போன்றோருக்கு சரியான ஓய்வை தர வேண்டும் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











