புளோரிடாவில்
தற்போதைய திட்டப்படி புளோரிடாவில் உள்ள சென்ட்ரல் புரோவார்ட் பூங்கா மைதானத்தில் இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான டி20 தொடர் நடைபெற வாய்ப்புள்ளது.
கரிபீயன் பிரீமியர் லீக் போட்டிகள்
தற்போது இதே மைதானத்தில்தான் கரீபியின் பிரீமியர் லீக் போட்டிகள் நடைபெறுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இதே மைதானத்திலேயே மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான போட்டியையும் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாம்.
வங்கதேசமும் வரலாம்
அதேசமயம், வங்கதேசத்தையும் இதில் இணைத்து முத்தரப்பு டி20 தொடராக நடத்தலாமா என்ற திட்டமும் பிசிசிஐக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து இதுவரை தெளிவான தகவல் இல்லை.
விரைவில் பேச்சு
இந்த விவகாரம் தொடர்பாக புளோரிடாவில் கூடி மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என்று தெரிகிறது.
மேற்கு இந்தியாவில் இந்தியா
தற்போது விராத் கோஹ்லி தலைமையிலான இந்திய அணி, மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணத்தில் உள்ளது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.