
அஸ்வின்
அஸ்வினுக்கு எப்போது நிறைய அணிகள் போட்டியிட்டு இருக்கிறது. 2011 ஐபிஎல் போட்டியில் அப்படித்தான் அஸ்வினுக்கு சென்னையும் பெங்களூரும் போட்டியிட்டது. பெங்களூர் உரிமையாளர் அஸ்வினை எடுக்க பல ராஜதந்திரம் செய்தும் தோற்றுப்போனது வரலாறு.

வாங்கியது
இந்த நிலையில் இன்றைய ஏலத்தில் அஸ்வினை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. இவர் மொத்தம் 7.60 கோடிக்கும் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். பல அணிகள் போட்டியிட்ட நிலையில் இவர் பஞ்சாப் அணிக்கு கொடுக்கப்பட்டு இருக்கிறார்.

கைவிட்டது
அஸ்வினை சென்னை அணி வாங்க தவறிவிட்டது. முக்கியமாக சென்னை அணி தனக்கு இருந்த ஆர்டிஎம் வாய்ப்பை பயன்படுத்த தவறிவிட்டது. இதை மற்ற வீரர்களுக்கு பயன்படுத்த இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

விடாமல் பிடித்த பிரீத்தி
அஸ்வினை எடுக்க பிரீத்தி சிந்தா அதிக முயற்சி எடுத்தார். மற்ற அணிகள் அதிக விலை கேட்டும் இவர் விடாமல் பிடித்தார். கடைசியில் அஸ்வினை வாங்கிய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்தார.


Click it and Unblock the Notifications











