
முதலில் வென்ற மும்பை
முதலில் நடந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி, பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியை வீழ்த்தியது.

2வது போட்டியில் டொபாகோ வெற்றி
2வதாக நடந்த கடைசி லீக் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸை வீழ்த்தியது டொபாகோ.

எல்லையில் வைத்து லாராவை சந்தித்த சச்சின்
சென்னை, டொபாகோ அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்தபோது பவுண்டரி லைனுக்கு அருகே வைத்து லாரா வந்தார். அங்கு அவர் சச்சினை சந்தித்தார். இருவரையும் ஒரு சேரப் பார்த்த புகைப்படக்காரர்கள் வளைத்து வளைத்து அதைப் படம் பிடித்தனர். ரசிகர்களோ ஆரவாரித்தனர்.

சின்னதாக உரையாடல்
இரு மாபெரும் வீரர்களும் பவுண்டரி லைனுக்கு அருகே நின்றபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

மறுபடியும் சந்திப்பார்கள்
மும்பை மற்றும் டொபாகோ அணிகள் 2வது அரை இறுதிப் போட்டியில் வருகிற சனிக்கிழமை மோதவுள்ளன. அப்போது லாராவும், சச்சினும் மீண்டும் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications











