டெல்லி : ஐபிஎல்லில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி பல்வேறு தரப்பினரின் பாராட்டை பெற்றவர் தினேஷ் கார்த்திக்
அணியின் கேப்டனாக சில போட்டிகளில் பங்கேற்று விளையாடிய இவர் ஐபிஎல் போட்டிகளில் இடையிலேயே கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்காக விளையாடவுள்ள தினேஷ் கார்த்திக், ரோகித் சர்மாவை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் புகழ்ந்துள்ளார்.
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஐபிஎல் 2020 தொடரில் கேகேஆர் அணிக்காக சிறப்பாக விளையாடி பல்வேறு தரப்பினரின் பாராட்டுக்களை பெற்றார். அணியின் சில போட்டிகளில் கேப்டனாகவும் செயல்பட்டார். துவக்கத்தில் அந்த அணி முன்னணியில் இருக்கவும் காரணமாக இருந்தார். தற்போது சையத் முஸ்தாக் அலி கோப்பைக்காக விளையாடவுள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரோகித் சர்மாவை 'கிங்' என்று புகழ்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக். மேலும் பக்கத்தில் கிரீடத்தையும் பதிந்துள்ளார். இதனிடையே நடராஜனைப் பற்றியும் தினேஷ் கார்த்தி தனது கருத்தை பகிர்ந்துள்ளார். நடராஜன் அனைவருக்கும் உத்வேகமாக அமைந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரில் கேகேஆர் அணியிலிருந்து தினேஷ் கார்த்திக் விடுவிக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் அவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.