IPL 2019: சென்னை, பெங்களூரு அணிகள் மோதும் போட்டி... டிக்கெட் விற்பனை 16ம் தேதி தொடக்கம்
சென்னை:சென்னை, பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் தொடரின் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் 16 ஆம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் 12வது சீசன் மார்ச் 23ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. அதில், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது.
The answer to the most asked Question of the Super Fans in the past two weeks... #TicketTicketTicket #WhistlePodu #YelloveAgain 🦁💛 pic.twitter.com/C5uiUO0PzD
— Chennai Super Kings (@ChennaiIPL) March 12, 2019
இந்நிலையில், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை மார்ச் 16ஆ தேதி தொடங்குகிறது. அதனை சென்னை அணி தனது அதிகாரபூர்வ ட்வீட்டர் தளத்தில் தெரிவித்துள்ளது.