For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அரையிறுதியில் இந்தியா vs நியூசிலாந்து.. யார் வெற்றிபெறுவார்கள்? டிரென்ட் போல்ட் சொன்ன பதில்!

பெங்களூரு: இந்திய அணிக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணி விளையாடினால், எந்த அணி வெற்றிபெறும் என்ற கேள்விக்கு காலம் தான் பதில் அளிக்க முடியும் என்று டிரென்ட் போல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசல் பெரெரா மற்றும் தீக்சனாவின் ஆட்டத்தால் 46.4 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட்டாகியது. நியூசிலாந்து அணி தரப்பில் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Time will tell what will happen against India in the Semi Final says New Zealand player Trent Boult

இதன்பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 23.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. இதன் மூலம் நியூசிலாந்து அணி உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் இந்திய அணியை எதிர்த்து நியூசிலாந்து விளையாடவே அதிக வாய்ப்புகள் உள்ளது.

அதேபோல் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணியை 8வது முறையாக தொடர்ந்து நியூசிலாந்து அணி வீழ்த்தி அசத்தியுள்ளது. இதனிடையே இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டு நியூசிலாந்து வெற்றிக்கு காரணமாக அமைந்த போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார்.

இதன்பின் நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் போல்ட் பேசுகையில், புதிய பந்தில் சிறப்பாக வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது மகிழ்ச்சியளிக்கிறது. மிகமுக்கிய போட்டியில் எங்களுக்கு சாதகமான முடிவு கிடைத்தது நிறைவாக உள்ளது. ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் நிச்சயம் சவால் நிறைந்தவை. அதேபோல் இந்த வகையான போட்டிகளில் புதிய பந்தில் தொடங்குவது கொஞ்சம் சவால் நிறைந்தது. இன்றைய ஆட்டத்தில் எனது அனுபவத்தை கொஞ்சம் பயன்படுத்தினேன். அதேபோல் இந்திய மைதானங்களில் விளையாடுவது எளிதானதல்ல.

ஒவ்வொரு போட்டிக்கும் வெவ்வேறு சூழல், வெவ்வேறு பிட்ச். அதுவும் உலகக்கோப்பை தொடர் முழுவதுமென்றால், கூடுதல் சவால் நிறைந்ததாகும். இந்திய அணி அணி மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. இதனால் அரையிறுதியில் யார் வெல்வார்கள் என்பதை காலம் தான் சொல்லும். அந்த போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Time will tell what will happen against India in the Semi Final says New Zealand player Trent Boult

2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடியது. அந்த போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி, இன்று வரை ரசிகர்களின் மனதில் அப்படியே உள்ளது. அதேபோல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரிலும் நியூசிலாந்து அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. இதனால் இம்முறை இந்திய அணி பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Story first published: Thursday, November 9, 2023, 22:47 [IST]
Other articles published on Nov 9, 2023
English summary
icc 50 over world cup: New Zealand Player Trent Boult said, India are playing phenomenal cricket. Time will tell what will happen there while playing India in the semifinal. I am sure it will be an exciting game.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+