
சஞ்சய் அதிரடி
அதன்பின் களமிறங்கிய சூர்யபிரகாஷுடன் இணைந்து ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்க்காக விளையாடிய சஞ்சய் யாதவ் ஜோடி சேர்ந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஒரு புறம் சூர்யபிரகாஷ் டி.என்.பி.எல் தொடரில் தனது 3வது அரைசதத்தை விளாச மறுபுறம் அபாரமாக விளையாடி சஞ்சய் யாதவ் தனது 5வது அரைசதத்தை டி.என்.பி.எல் தொடரில் 30 பந்துகளில் விளாசினார்.

இமாலய இலக்கு
இவ்விருவரும் இணைந்து தமிழ்நாடு பிரீமியர் லீக் வரலாற்றில் 4வது விக்கெட்டிற்கு அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பை 133 ரன்கள் அமைத்தனர். நெல்லை ராயல் கிங்ஸ் சார்பில் அதிகபட்சமாக சஞ்சய் யாதவ் 47 பந்துகளில் 87 ரன்கள் குவிக்க அந்த அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 184 ரன்கள் எடுத்ததுசேப்பாக் சூப்பர் கில்லீஸ் சார்பில் பெளலிங்கில் சித்தார்த் மற்றும் ஹரீஷ் குமார் மட்டுமே ஆறுதல் அளிக்கும் வகையில் செயல்பட்டனர்.

முதலில் தடுமாற்றம்
இரண்டாவது இன்னிங்ஸில் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும் டி.என்.பி.எல் வரலாற்றில் முதன்முறையாக பாபா அபராஜித்தின் மூலம் மன்கட் முறையில் நட்சத்திர வீரர் ஜெகதீசன் (15 பந்துகளில் 25 ரன்கள்) ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ராதாகிருஷ்ணன்(1), சசிதேவ்(15) பெரிதளவில் பங்களிக்க தவறினர்.

சமனான போட்டி
அதன்பின் 4வது விக்கெட்டிற்கு சோனு யாதவ் மற்றும் கேப்டன் கெளஷிக் காந்தி இணைந்து அணியை சரிவிலிருந்து மீட்டனர். சோனு யாதவ் தன் பங்கிற்கு 23 பந்துகளில் 34 ரன்கள் குவித்து கை கொடுக்க, கேப்டன் கெளஷிக் காந்தி டி.என்.பி.எல்லில் தனது 9வது அரைசதத்தை நிறைவு செய்தார். சேப்பாக் கேப்டன் கெளஷிக் காந்தி அதிகபட்சமாக 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து முக்கிய தருணத்தில் அதிசயராஜ் டேவிட்சனிடம் தனது விக்கெட்டை இழந்தார்.

சூப்பர் ஓவர்
வெற்றிக்கான இறுதி ஓவரில் அதிசயராஜ் பந்துவீச்சை எதிர்கொண்ட ஹரிஷ் குமார் 12 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 26* ரன்கள் விளாசி ஸ்கோர் சமமானதால் சூப்பர் ஓவர் முறை கொண்டு வரப்பட்டது. சூப்பர் ஓவரில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் ஒரு விக்கெட் இழப்பிற்கு 9 ரன்கள் மட்டுமே எடுக்க நெல்லை ராயல் கிங்ஸின் பேட்டர்கள் அந்த இலக்கை வெற்றிகரமாக அடைந்து இந்த சீஸனில் தங்களின் முதல் வெற்றியைப் பதிவு செய்தனர்


Click it and Unblock the Notifications











