
பயிற்சி முகாம்
ஆனால் காஷ்மீரை சேர்ந்த உம்ரான் மாலிக், சாதாரண பயிற்சி முகாமையே பேசு பொருளாக மாற்றிவிட்டார். அதற்கு காரணம், உம்ரான் மாலிக்கின் அதிவேக பந்துவீச்சு தான். பயிற்சியில் எப்படி பந்துவீசிகிறோம் என்பதை பொறுத்து தான் போட்டியிலும் பந்துவீசுவோம். ஆனால் உம்ரான் மாலின் வீசிய பந்து, ரெக்கார்ட் புக்கில் இடம்பெற கூடியவை.

ஆச்சரியம்
நேற்று உம்ரான் மாலிக் எப்போதும் போல் சாதாரணமாக பந்துவீசி கொண்டு இருந்தார். அப்போது பயிற்சி முகாமில் சலசலப்பு எற்பட்டது. இந்திய அணி நிர்வாகிகள், பயிற்சியாளர்கள், அவர்களுக்குள்ளே பேசி கொண்டும், பந்துவீச்சு வேகத்தை அளவிடும் Speed Gun பின் நின்று ஆச்சரியமாக பார்த்து கொண்ட இருந்தனர்.

163.7 கி.மீ வேகத்தில் பந்துவீச்சு
அப்போது தான் தெரிந்தது, உம்ரான் மாலிக் வீசிய பந்து 163.7 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசி இருக்கிறார் என்று. இது பாகிஸ்தான் ஜாம்பவான் சோயிப் அக்தர் வீசிய 161 கிலோ மீட்டர் வேகத்தை விட அதிகமாகும். இது பயிற்சி என்பதால், ரெக்கார்ட் புத்தகத்தில் அதிகாரப்பூர்வமாக இடம்பெறாது. ஆனால், வீடியோ ஆதாரத்துடன் கின்னஸ்-க்கு கூட அனுப்பினால், அவர்கள் ஆராய்ந்து முடிவு எடுப்பார்கள்.

சொன்னதை செய்த உம்ரான்
ஐபிஎல் தொடரில் ஏற்கனவே 157 கிலோ மீட்டர் வேகத்தில் உம்ரான் மாலிக் பந்துவீசி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தொடர்ந்து 14 போட்டியிலும் அதிவேகமாக பந்துவீசியதற்காக தனி விருதையும் வாங்கி இருக்கிறார். அப்போதே இறைவன் நாடினால் 160 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துவீசுவேன் என்று உம்ரான் மாலிக் கூறியிருந்தார். தற்போது பயிற்சியில் அது சாத்தியமாகி விட்டது.


Click it and Unblock the Notifications











