
புது சர்ச்சை
இந்நிலையில் இந்திய வீரர்கள் ஓட்டலில் செய்த விஷயம் சர்ச்சையாகியுள்ளது. அதாவது ஓட்டலில் செக் இன் செய்யும் இந்திய அணியை சேர்ந்தவர்களுக்கு, அந்த ஹோட்டலின் அதிகாரிகள் சார்பில் நெற்றியில் திலகம் வைத்து மரியாதையுடன் வரவேற்பார்கள். இதனை ராகுல் டிராவிட் உள்ளிட்ட பலரும் கண்ணாடிகளை கழட்டிவிட்டு, ஏற்றுக்கொண்டனர்.

2 பேர் புறகணிப்பு
ஆனால் வேகப்பந்துவீச்சாளர்கள் முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகிய 2 வீரர்களும் அதனை வேண்டாம் என புறகணித்துவிட்டு சென்றனர். இவர்களுடன் சேர்ந்து பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரும் புறகணித்தார். சிராஜ் மற்றும் உம்ரான் ஆகிய இருவரும் இஸ்லாமிய சமுகத்தை சேர்ந்தவர்கள் என்றாலும், இந்தியாவில் பாரம்பரியமாக வழங்கப்படும் மரியாதையை இப்படி அவமதிப்பது சரியில்லை என விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

எப்போது நடந்தது
எனினும் இணையத்தில் பரவு இந்த வீடியோ தற்போது எடுத்தது இல்லை எனத்தெரிகிறது. ஏனென்றால் ஆஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரில் உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. முகமது சிராஜ் மட்டுமே வாய்ப்பு பெற்றுள்ளார். இதன் மூலம் இந்த சம்பவம் சமீபத்தில் நடந்து முடிந்த நியூசிலாந்து தொடர் அல்லது இலங்கை தொடரில் தான் நடந்திருக்கும் எனக்கூறப்படுகிறது.

கவுதம் கம்பீர் செயல்
இது ஒருபுறம் இருக்க, இந்திய வீரரும், பாஜக எம்.பியும் ஆன கவுதம் கம்பீர் சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் விழாவில் பங்கேற்று மரியாதை செலுத்தினார். இதுகுறித்து ட்வீட்டும் செய்திருந்தார். கட்சியின் கொள்கைகள், மதங்களை விட மனிதர்கள் தான் பெரிது என அவர் செய்த விஷயம் இணையத்தில் பாராட்டுக்களை பெற்று வந்தது.

இந்தியர்களின் வழிபாடு
மறுபுறம் நியூசிலாந்து தொடரின் போது இந்திய வீரர்கள் சூர்யகுமார் யாதவ், யுவேந்திர சாஹல், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட வீரர்கள் கேரள மாநிலம் திருவனந்தபுர கோயிலில் தரிசனம் செய்திருந்தனர். இதுமட்டுமல்லாமல் சிவன் கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களும் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











