
உம்ரான் பவுலிங்
பேட்டிங்கிற்கு சாதகமான கவுகாத்தி களத்தில் ஓவர்களை வீசிய அவர் 57 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். உம்ரானின் அதிவேக பவுலிங்கை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறியதை தெளிவாக பார்க்க முடிந்தது. இந்நிலையில் அவரின் பவுலிங் புதிய சர்ச்சை ஒன்றையும் கிளப்பியுள்ளது.

பெரும் சாதனை
அதாவது நேற்றைய போட்டியில் அவர் ஒரு பந்தை 156 கிமீ வேகத்தில் வீசியதாக கூறப்பட்டது. இதன் மூலம் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேக பவுலிங் வீசியவர் என்ற பெருமையை உம்ரான் படைத்தார். ஆனால் இதில் உண்மை இல்லை என்றும், உம்ரான் மாலிக் வீசிய பந்து வேகம் குறைந்த ஒன்று தான், தேவையின்றி தவறான தகவல் பரவுவதாக ஆதாரங்கள் வெளியாகியுள்ளன.

இந்தி ஒளிபரப்பு
ஆட்டத்தின் 14வது ஓவரின் 4வது பந்தை ஃபுல்லர் லெந்தாக வீச, அதனை எதிரணி பேட்டர் சிங்கிள் அடித்தார். ஸ்டார் ஸ்போர்ட்ஸின் இந்தி ஒளிபரப்பில் அந்த குறிப்பிட்ட டெலிவரியின் போதே பந்தின் வேகத்தை காட்டாமல், ஓவரின் இறுதியில் 156 கிமீ என 4வது பந்தை குறிப்பிட்டு காட்டிருந்தனர். இதனை பார்த்து தான் சாதனை என ரசிகர்கள் கொண்டாடினர். ஆனால் ஆங்கில ஒளிபரப்பில் முற்றிலும் மாறுபட்டுள்ளது.

என்ன பிரச்சினை
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஆங்கிலத்தின் அந்த பந்து வீசப்பட்ட உடனேயே கீழே வேகம் என்பதை குறிப்பிட்டு காட்டினர். அதில், அப்பந்து 145.7 கிமீ வேகத்தில் தான் வீசினார் என காட்டப்பட்டது. இதனால் உம்ரான் சாதனை படைத்தாரா? இல்லையா? என்ற குழப்பத்தில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர். இவர் ஏற்கனவே ஐபிஎல்-ல் 157 கிமீ வேகத்தில் வீசி டி20ல் அதிவேக பவுலர் என்ற சாதனையை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











